அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்
இடுக்கண் தருபவன்
இறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.
புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல
வந்து போவதற்கு
துன்பமும், இன்பமும்
தூரத்தில் இல்லை
நம்மோடுதான்
விழித்தால்தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல்தான்
அனுபவம் கிடைக்கும்-உன்னை
உணர்ந்தால்தான்
உலகம் புரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
எண்ணமும்..வண்ணமும்..அருமை.
ReplyDeleteவருகையின் அடையாளமாய் அவசரமாய் சில வரிகள்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
ReplyDelete