Wednesday, June 3, 2009

உலகம் புரியும்.

அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்

இடுக்கண் தருபவன்
இறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.

புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல

வந்து போவதற்கு
துன்பமும், இன்பமும்
தூரத்தில் இல்லை
நம்மோடுதான்

விழித்தால்தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல்தான்
அனுபவம் கிடைக்கும்-உன்னை
உணர்ந்தால்தான்
உலகம் புரியும்.

2 comments:

  1. எண்ணமும்..வண்ணமும்..அருமை.
    வருகையின் அடையாளமாய் அவசரமாய் சில வரிகள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete