மயிலிறகு இருந்த
உன் புத்தகத்தில்
ரகசியமாய்
என் காதலைச் சொன்னேன்
குறியீடாக – 143
கடைசிவரை அது
ரகசியக் குறியீடாகவே
இருந்துவிட்டது....
பிறந்தநாள்
என் பெற்றோரின் பிறந்தநாளைக் கூட
திடீரெனக் கேட்டால் எனக்கு
சொல்லத்தெரியாது!
நான் தூங்கும்போது எழுப்பிக் கேட்டால்க் கூட
பிசகாமல் சொல்வேன்
உன் பிறந்தநாள் எப்போதென்று!
என் இதயத்தில் கலந்தவள் அல்லவா நீ
தூங்கும்போதும் இதயம் துடிக்குமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment