Thursday, June 11, 2009

உள்ளதைச் சொல்லிய சிறுவன்

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் எதிர்வீட்டு வெளிக்கதவுமூடியிருந்தது. வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தெரு வழியே போன ஒரு சிறுவன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு விறுவிறுவென நடந்தான்.
வாசலில் நின்று கொண்டிருந்த கலைவாணர் அவனைப் பார்த்து விட்டார். தம்பிஇங்கே வாடா என்று அழைத்தார். சிறுவன் மிகவும் அமைதியாக அவர் முன்நின்றான். தம்பி பையிலே என்ன இருக்கு? என்று கலைவாணர் கேட்டார். ஒண்ணுமில்லையே என்று அந்தச் சிறுவன் கூறினான்.
காட்டு பார்க்கலாம் என்று அவன் சட்டைப் பையில் கைவிட்டார். உள்ளே பூட்டுஇருந்தது. கையும் களவுமாகப் பிடிபட்ட அவன் பூட்டை கலைவாணர் கையில்கொடுத்து விட்டு மன்னிப்புக் கேட்டான். ஏண்டா பூட்டை எடுத்தே என்றார்கலைவாணர். பழைய சாமான் கடையில் போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்னு எடுத்தேன் என்று உள்ளதைச் சொன்னான் அந்தச் சிறுவன்.
அந்த நேரம் அங்கே வந்த எதிர் வீட்டுக்காரர் கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தார். தெருவில் கலைவாணர் ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அந்தச் சிறுவன் தான் பூட்டைத் திருடிஇருப்பான். என்.எஸ்.கே. பிடித்துக் கொண்டார் என்று கருதி ஆத்திரத்தோடுஅங்கே வந்தார்.
கலைவாணர் சிரித்தபடியே, வாங்க வாங்க... பூட்டைத் தேடுறீங்களா? என்றுகேட்டுவிட்டு ஒரு சிறுவன் தூக்கிக்கிட்டு ஓடினான். அவனை பிடித்துப் பூட்டை. நான் வாங்கி வச்சிருக்கேன். இந்தாங்க பூட்டு. பாவம் சிறுவன் பசிக்காக அப்படிச்செய்துவிட்டான். அதுக்காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள். டேய் தம்பி. கொடுப்பாரு போயி வாங்கிட்டுப் போ! என்று கலைவாணர் சொல்லி அனுப்பினார். சிறுவன் செய்தது திருட்டுதான். ஆனாலும், அச்சிறுவன் உள்ளதைச் சொல்லிவிட்டான் அல்லவா. அவனது உண்மை நிலையை அறிந்த கலைவாணர் அவனதுஇயலாமையை நினைத்து பணம் வாங்கிக் கொடுத்தார்.
திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டு - கலைவாணர் ஒருசிறுவனிடமிருந்த இயலாமையால் ஏற்பட்ட திருட்டு குணத்தைக் களைந்தார்.

2 comments:

  1. திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

    சரியே.

    ReplyDelete