Friday, June 12, 2009

அன்பே வெல்லும்

ஒரு ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தார் ... அவர் விலையுயர்ந்த குதிரை ஒன்றை விலைக்கு வாங்கினார் ... அந்த குதிரை மீது சவாரி செய்ய விரும்பினார் ... அவர் அந்தக் குதிரை மேலே ஏறும் போதெல்லாம் அது அவரை கீழே தள்ளி விழுத்திவிடும் ...அவருக்கு கோவம் வந்து விடூம் சவுக்கால் அடித்து விட்டுப் போய் விடுவார் ... பல நாட்கள் முயன்றும் அவரால் முடியவில்லை ...தோல்வியே கண்டார் ... விலை உயர்ந்த குதிரையை வாங்கியும் சவாரி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தினார் ...

அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார் ... அந்த ஞானியிடம் இந்த பணக்காரர் சென்று தான் ஒரு விலை உயர்ந்த குதிரை வாங்கியதாகவும் .. அந்த குதிரையால் தான் படும் துன்பத்தையும் கூறினார் .... அதர்க்கு ஞானி கேட்டார் ... நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறீர் ? ... அதற்க்கு ( தீனி ) சாப்பாடு போட்டு பேனுகின்றீரா ? அதனைக் குளிப்ப்பாட்டிகிறீரா ? என்று கேட்டார் ..

அவற்றை எல்லாம் ஏன் நான் செய்ய வேண்டும் ... அவற்றை செய்வதர்க்கு பல வேலையாட்களை வைத்திருக்கின்றேன் ... நான் சவாரி செய்ய மட்டும் தான் அதனை வெளியே அழைத்து வருவேன் .. என்று கூறினார் அந்த பணக்காரர் ...

நாளை முதல் நீங்கள் குதிரையுடன் அதிக நேரத்தை செலவிட்டு ... உங்கள் கையாலே உணவு கொடுத்து ... குளிக்க வார்த்து.. அன்பாக அதன் மேலே ( உடம்பு ) தடவி அன்பு காட்டுங்கள் ... அன்பினால் எல்லாம் நடக்கும் என்றார் ஞானி ...

மறுநாள் ஞானி சொன்ன படியே செய்து குதிரையை பரிவோடு ( அன்பாக )கவனிக்க தொடங்கினார் பணக்காரர் .... அதன் பிறகு குதிரை அந்த பணக்காரர் சவாரி செய்யும் போது எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை ... மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை சுமந்து சென்றது .

இதில் இருந்து என்னத்தை புரிந்து கொண்டீர்கள் ? அன்பால் எதையும் வெல்லலாம் ( சாதிக்கலாம் )

No comments:

Post a Comment