இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழக்குழியில் விழுந்தன.
இரண்டும் வெளியே வர கடுமையாக முயன்றுகொண்டிருந்தன. இதற்கிடையே பல தவளைகள் குழியின் மேல் கூடின. இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது? முயற்சியை கைவிடுங்கள் நிம்மதியாக செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து இறந்தது.
இரண்டாம் தவளை மேலும் மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது.
அது மேலே வந்ததும் மேலிருந்த தவளைகளெல்லாம் ‘நாங்கள் சொன்னது உன் காதில் விழலியா?’ எனக் கேட்டன.
அந்தத் தவளையோ,’எனக்கு காது கேட்காது. மேலிருந்து வெளியே வர என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி’ என்றது.
அருமை நண்பரே. தொடருங்கள்.
ReplyDelete