Friday, June 5, 2009

சின்னக் கூடை!

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

‘‘ஏம்பா! நல்ல பெரிய பெரிய மீன்கள் மாட்டுது. அதெல்லாம் விட்டுட்டு சின்னச் சின்ன மீனா பிடிச்சிக்கிட்டு இருக்கியே. பெரிய மீனைப் பிடிச்சு வியாபாரம் செஞ்சா நிறைய லாபம் வருமே…’’ என்றான்.

அதற்கு அடுத்தவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘என்கிட்ட சின்னக் கூடைதானே இருக்கு. அதுக்குள் வைக்கிற மாதிரி சின்ன மீன்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.’’

நீதி : வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.

1 comment: