திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று..
திருமணம் ஒன்றில் தலைமை தாங்க வாரியார் சென்றிருந்தார்.
அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.
இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.
சாமி.. முருகனுக்கு ஆறு தலைன்றனுகோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு.?
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டு பிசியாக இருந்த மணமக்களின் தந்தைகளை அழைத்தார்.
அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” அவர்கள் இருவரும் "இன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
நடிகவேள் அவர்களை பார்த்து வரியார் சொன்னார்...
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்சே இவங்களுக்கு தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு தூக்கம் எப்படி வ்ரும் ? தூங்கறதுக்கு நேரம் ஏது?
Subscribe to:
Post Comments (Atom)
சபாஷ்.
ReplyDeleteராதாவோட தீவிர ரசிகன் நான். ஆனாலும் வாரியாரின் பதிலும் சமயோசிதமும் அருமை.