நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.
பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !
அன்பென்ற மழை அகிலமெல்லாம் பொழியவேண்டும் அதில் சிறு துளியாய் நான் இருக்கவேண்டும்
No comments:
Post a Comment