Monday, March 30, 2009

என்ன பொழப்புடா……..

பக்கத்து வீட்டுக்காரனை எதேர்ச்சியாக சந்திக்க
சிரிச்சுகிட்டே சொன்னான்
உனக்கென்ன பா software engineer….

car bungalow கை நிறைய சம்பளம்
வாழ்க்கைய வாழற………

சொன்னவன் முகத்துக்கு நேரா சொல்ல ஆசைபட்டன்

அட போடா…………..

பெத்தவங்கள பார்க்க முடியுல
பெத்ததுங்களையும் பார்க்க முடியுல
கொண்டவளை இரசிக்க முடியுல
கொண்டதுகளையும் இரசிக்க முடியுல….

சூரியன பார்த்து சில காலம் ஆயிடுச்சு
சுத்தமான காத்த சுவாசிச்சு சொற்ப காலம் ஆயிடுச்சு
அம்மா கையால சாப்ட்டு பல வருஷம் ஓடிடுச்சு
அகமுடையாள் அன்பா போட்ட சோறு மறந்தே போய்டுச்சு….

Cafe-Day Burgerum, cokeum தான்
சோறு தண்ணினு ஆயிடுச்சு ……..

மல்லாந்து நிம்மதியா படுத்துறங்க நேரம் இல்ல
கல்லாயணம் கார்த்திகனு ஒரு விழாக்கும் போக முடியுல
இந்த அதிக கூலிக்கு மாறடிக்கற கொத்தடிமை வாழ்கைல…

தலைவலியும் காய்ச்சலும் மட்டும் இல்ல … எங்க
வாழ்கையும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்…..

பொழப்புக்காக இந்த பொட்டிய தொட
பொழப்பே இதுவாச்சி…..
கடுவுள பார்த்தா கை கூப்பி வேண்டிபேன்
போதும்டா சாமி.. அடுத்த பிரவியலயாவது
என் பொழப்புக்கு வேற வழி காட்டு ……

என் சோகத்த கொட்டிபுட்டு அத கணினியில் பதிஞ்சுபுட்டு
மறுபடியும் கிளம்பிட்டன் பொழப்ப பார்க்க….

என்ன செய்ய போழபாச்………சே!!!!!!!!!

No comments:

Post a Comment