Tuesday, March 17, 2009


தள்ளாத வயதில்
தன்னந்தனியே
தவிடு, உமியை
தரம்பிரிக்கிறாய்.
மக்களாட்சி நடத்தும் நாட்டில்
மகராசி நீ
மங்கிப்போன பார்வையுடன்
மாடு போல உழைக்கிறாய்.

ஓராடை அணிந்து உணவருந்தக்கூடாது -
இது 'ஆசாரக்கோவை'யின் அருள்மொழி.

மேலாடையின்றி நீ ஆக்கும் மோர்க்கூழின் தித்திப்பு
எனக்குள் போக்கும் ஆகாரவேட்கைத் தவிப்பு

வீதியோரம் ஆயிரம் அரைவேக்காட்டு பாஸ்ட் புட் இங்கே
ஆதியிலே நான் ருசித்த ஆயாக்கடை இட்டிலி எங்கே

ஏசி ரூமில் இருந்துகொண்டு கள்ளக்கணக்கெழுதும் திருட்டுக்கூட்டம்
பாசி மணி மட்டும் அணிந்த உன் கள்ளமில்லா உழைப்பைக் கண்டஞ்சும்

No comments:

Post a Comment