பத்து மாதங்கள் சுமந்திருந்து,
உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,
பகலிரவாய் கண்விழித்துக் காத்து,
தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,
விதவிதமாய் உணவு செய்து ஊட்டி,
எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்து,
அழகிய துணிமணிகள் வாங்கித் தந்து,
உயரிய நகைகள் பூட்டி அழகு பார்த்து,
பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து,
துன்பம் என்பதே அறியாமல்,
வளர்த்து பெரியவளாக்கினாள் தாய்.
யாரோ ஒருவனை எங்கோ பார்த்து,
கண்ணால் பேசி மனதை பறிகொடுத்து,
தாயென்ன..அவன்தான் தன்னுயிரென,
தயங்காமல் ஓடிப்போனாள் மகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment