Wednesday, May 20, 2009

முடிந்த கதையை நினைக்காதே

புத்தர் ஒருமுறை தன் ஆஸ்ரமத்தில் இருந்தபோது ஒரு வாலிபன் வேகமாக வந்தான்.
"மக்களை நல்வழிப்படுத்துவதாக கூறிக் கொண்டு ஏதோதோ தத்துவம் பேசுகிறீரே! உம்மால் அதை கடைபிடிக்க முடியுமா? இந்த வேலையை எல்லாம் இனிமேல் விட்டுவிடும்," என ஆவேசமாகக் கூறியதுடன், அவர் முகத்தில் உமிழ்ந்தே விட்டான்.
அவர் அருகில் இருந்த ஒரு சீடர், "புத்தரே! உத்தரவிடுங்கள், நான் அவனை ஒருகை பார்க்கிறேன்," என ஆவேசமாக எழுந்தார்.
புத்தர் அவரை கைஜாடை காட்டி பொறுமையாக இருக்க வேண்டினார். ஒரு துண்டால் முகத்தை துடைத்தார்.
"சீடனே! ஏன் கோபிக்கிறாய். இதை இத்துடன் விட்டுவிடு. சென்ற பிறவியில் நான் இவருக்கு ஏதோ துன்பம் செய்திருக்கலாம். அதை அவர் இன்று தீர்த்திருக்கிறார். சென்றபிறவியில் இவரிடம் பட்ட பாவக்கடன் இன்றோடு சரிசெய்யப்பட்டு விட்டது. எந்தக்காரியமும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை.
மறுநாள் அந்த நபர் மனம் வருந்தி கங்கைக்கரையில் இருந்த புத்தரிடம் மன்னிப்பு கேட்டான்.
முடிந்ததை நினைக்காதே என்றார் புத்தர்.

No comments:

Post a Comment