Friday, May 22, 2009

உறைந்த நினைவுகள்

மலரென்று உனை எண்ணி மனதினில் வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தந்து வேறெங்கோ நீ
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என் சுவாசம் நிறைந்திருக்கும்

No comments:

Post a Comment